பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திருத்துறைப்பூண்டி, ஜூலை 19: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் விளக்கேற்றி துர்க்கை அம்மனை வழிபட்டனர். முதல் ஆடி வெள்ளி என்பதால்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: