ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 19: இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில், சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும் 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: