குடியாத்தம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் முதியவர் கைது

குடியாத்தம், ஜூலை 19: குடியாத்தம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெற்றோர் வெளியே சென்ற நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(70) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முதியவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குடியாத்தம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: