×

வந்தவாசி அருகே அடுத்தடுத்து துணிகரம்; கட்டிட மேஸ்திரி உள்பட 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் திருட்டு: தடயங்கள் சேகரித்து போலீசார் விசாரணை

வந்தவாசி, ஜூலை 19: வந்தவாசி அருகே கட்டிட மேஸ்திரி உள்பட 2 வீடுகளில் 10 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் சாலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி முனியம்மாள்(45). இவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த எட்டரை சவரன் தங்க நகை, ரு.98 ஆயிரம், 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதேபோல் இவரது வீட்டின் அருகே உள்ள துரைசாமி என்பவரின் வீட்டின் கதவும் திறக்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து பீரோவை பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தது. அதில் இருந்த ஒன்றரை சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வடவணக்கம்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் எஸ்ஐக்கள் மணிமாறன், தட்சணாமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரித்தனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர் விஜயகுமார் தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வந்தவாசி அருகே அடுத்தடுத்து துணிகரம்; கட்டிட மேஸ்திரி உள்பட 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் திருட்டு: தடயங்கள் சேகரித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Natarajan ,Salampundi ,Malhiyur ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...