×

கலசபாக்கம் அருகே பர்வத மலை மீது ஏறிய பெங்களூரு கல்லூரி மாணவன் மூச்சுத்திணறி பலி

கலசபாக்கம்: பர்வதமலை கோயிலில் தரிசனம் செய்து திரும்பிய பெங்களூரு கல்லூரி மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த பெல்லாரி தேவி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் மனோஜ்குமார்(21). பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள பர்வதமலை கோயிலுக்கு சென்றார். பின்னர், மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு மாலை 5.30 மணியளவில் மலையில் இருந்து கீழே இறங்கினர்.

இரவு 7 மணியளவில் மலை அடிவாரத்தில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே வந்தபோது மனோஜ்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அங்கிருந்த பக்தர்களின் உதவியுடன் மனோஜ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கடலாடி போலீசார், மனோஜ்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்வதமலை மீது ஏறிய கல்லூரி மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கலசபாக்கம் அருகே பர்வத மலை மீது ஏறிய பெங்களூரு கல்லூரி மாணவன் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Parvathamalai temple ,Viswanathan ,Manojkumar ,Bellary Devi ,Bangalore, Karnataka ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...