ஜவுளி கடை ஊழியர் மாயம்

கிருஷ்ணகிரி, ஜூலை 18: வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கீரப்பா(24). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கீரப்பா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் நரசம்மா, வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜவுளி கடை ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: