கோவை, ஜூலை 18: நாமக்கல்லை சேர்ந்தவர் பர்வதம் (68). இவர், கோவை மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் வசித்து வந்தார். இவர், கடந்த 14ம் தேதி காப்பகத்தில் கட்டிலில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, காப்பக ஊழியர்கள் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவை காப்பகத்தில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.
