விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிட வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி பொதுநல வழக்கு: விரைவில் விசாரணை

சென்னை: கோவையை சேர்ந்த பிரவீன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்திற்கு காரணம் அந்த விமானத்தின் விமானிதான் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்தன. அந்த விமானத்தை ஓட்டிய விமானியும்தான் விபத்தில் பலியானார். அவர்தான் தவறு செய்தார் என்று ஊடகங்களுக்கு எப்படி தெரியும்.

உரிய விசாரணை எதுவும் செய்யாமல் செய்திகளை வெளியிட்டு விமானியின் குடும்பத்தினர் மீது களங்கத்தை ஏற்படுத்தி அவர்களை உள்ள அளவில் காயப்படுத்துகின்றனர். இதேபோல் பல விமான விபத்துகளிலும் இதேபோல் உண்மையை ஆராயாமல் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே, இதுபோன்ற விமான விபத்துகள் தொடர்பான உண்மையை ஆய்வு செய்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி ஒன்றிய விமானத்துறை செயலருக்கு கடந்த 14ம் தேதி மனு அனுப்பினேன். எனவே, எனது மனுவை பரிசீலித்து விமான விபத்து தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவது குறித்த வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிட வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி பொதுநல வழக்கு: விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: