இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 76 மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர்கள் இணைந்திருந்தனர். இக்கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடக்கிறது, தற்போதைய நிலவரம் என்ன? என்று மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டோட மண்-மொழி-மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு, வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், திமுகவில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3ம் தேதி தொடங்கினோம். தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி.
செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம்; நன்றி! நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கு. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் திமுவினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
ஒன்றிய பாஜ அரசு, அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை வீடு வீடாக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
நாம் உருவாக்கியிருக்க ‘பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள்’ திமுகவின் மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டன்றத் தேர்தலுக்கும், தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை எனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘ஓரணியில் தமிழ்நாடு’ என கைகோர்க்கும் குடும்பங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உறவென விருந்தோம்பல் வழங்கி, ஓரணியில் தமிழ்நாடு எனக் கைகோர்க்கும் குடும்பங்கள்! “எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரை தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் திமுகவில் இணைத்துக் கொள்கிறோம்” என கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் பாஜ, அதிமுக இழைத்த அநீதியை வீடு, வீடாக எடுத்து சொல்லுங்கள்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.
