வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

திருச்சி, ஜூலை 17: திருச்சி ஏர்போர்ட் முல்லை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(63). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். அதன் பின்னர் கடந்த 14ம் தேதி வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் கிரில் கேட் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் வீடு புகுந்து 14 கிராம் நகை, 25 கிராம் வெள்ளி பொருட்கள், செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில்,‘‘ரவிச்சந்தின் உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, பீரோவை பூட்டாமல் சென்றுள்ளார். மேலும், வீட்டின் கிரில் கேட்டை மட்டும் பூட்டி சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகிறோம் என்று கூறினர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: