காரமடை, ஜூலை 17: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று காரமடையை அடுத்துள்ள புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. முதல் நாளில் மேட்டுப்பாளையம் குறுமைய அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
இதில் 41 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். விளையாட்டு போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கந்தசாமி, பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் ஜெயராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அப்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
The post புஜங்கனூர் அரசு பள்ளியில் குறுமைய அளவில் விளையாட்டு போட்டிகள் துவக்கம் appeared first on Dinakaran.
