கோவை, ஜூலை 17: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அதில்நிகாம் (21). இவர், கோவை துடியலூரில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி இவர் தனது பைக்கில் நண்பரை அழைத்துச்செல்ல கோவை ரயில் நிலையம் வந்தார். பின்னர், ரயில் நிலையம் பின் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு, தனது நண்பனை அழைத்து வர நுழைவு வாயில் அருகே காத்திருந்தார்.
15 நிமிடங்கள் கழித்து, தனது நண்பருடன் அங்கு வந்தார். ஆனால், பைக்கை காணவில்லை. கடும் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் திருடு போன இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து வருகின்றனர்.
The post கோவை ரயில் நிலையத்தில் பைக் நிறுத்தி சென்ற 15 நிமிடத்தில் திருட்டு appeared first on Dinakaran.
