நிலத்தகராறில் மோதல்: 8 பேர் மீது வழக்கு

போச்சம்பள்ளி, ஜூலை 16: மத்தூர் அருகில் உள்ள களர்பதி கலைஞர் நகரை சேர்ந்தவர்கள் ஜமீன்தார் மற்றும் காசிம். உறவினர்களான இவர்களுக்கு இடையே, நீண்ட காலமாக நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த தகராறில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டை, கல்லால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். காயமடைந்த இரு தரப்பை சேர்ந்தவர்கள், மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் காதர் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜமீன்தார்(55), ரிஸ்வான்(35), இம்ரான்(28) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அதே போல், ஜமீன்தார் அளித்த புகாரின் பேரில் காசிம்(54), காதர்பீவி(50) ஷபானா (20) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

The post நிலத்தகராறில் மோதல்: 8 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: