நித்திரவிளை, ஜூலை 16: நித்திரவிளை அருகே பைக்- பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன்(50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தடம் எண் 81சி என்ற அரசு பேருந்தை கருங்கல் பகுதியில் இருந்து நித்திரவிளை நோக்கி ஓட்டி வந்தார். அப்போது, காஞ்சாம்புறம் பகுதியில் வைத்து எதிரே வந்த பைக், அரசு பேருந்து மீது மோதியுள்ளது.
இதில் பைக்கில் வந்த கலிங்கராஜபுரம் புதுவல் புத்தன்வீடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(39) என்ற கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post நித்திரவிளை அருகே பைக் விபத்தில் வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.
