போடியில் மக்களுடன் நகராட்சி நிர்வாகம் முகாம்

 

போடி, ஜூலை 15: போடி 9வது வார்டு பகுதியில் நடந்த மக்களுடன் நகராட்சி நிர்வாகம் முகாமிற்கு நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை வகித்தார். கமிஷனர் பார்கவி முன்னிலையில் வகித்தார். இந்த முகாமில் நகராட்சி நிர்வாகத்திலிருந்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஒவ்வொரு தெருவாக சென்று பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் கேட்கப்பட்டு, அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன், 9து வார்டு கவுன்சிலர் மணிகண்டன், துறை சார்ந்த அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போடியில் மக்களுடன் நகராட்சி நிர்வாகம் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: