- புடவை
- சென்னை
- நாகராஜன்
- கில் நெடுங்கல் கிராமம்
- பொத்தட்டுர்பேட்டை
- திருவள்ளூர் மாவட்டம்
- பிரேம லட்சுமி
- கிரண்
- திருத்தணி
- பள்ளி…
சென்னை, ஜூலை 14:திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே, கீழ் நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், போட்டோ கிராபர். இவருக்கு பிரேம லட்சுமி (16) என்ற மகளும், கிரண் (14) என்ற மகனும் உள்ளனர். இதில் சிறுவன் கிரண் திருத்தணியில் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நாகராஜன் அவரது மனைவி ஜோதியுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தார்.
அப்போதும், வீட்டின் வரண்டாவில் கொக்கியில் புடவையால் ஊஞ்சல் கட்டி சிறுவன் கிரண் விளையாடிக் கொண்டிருந்தான். கிரணின் கழுத்தில் சிக்கிக்கொண்டது. இதில் புடவை இறுகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிரணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கழுத்தில் புடவை இறுகி பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.
