ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 11: திருவாடானை தாலுகாவில் உள்ள மல்லிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (65). இவர் டைல்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கடுக்கலூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சக்திவேல் மயக்கம் அடைந்தார். அவரை திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பாலைகுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.
