புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (42). இவரது கணவர் சரவணன் (44). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கம்ப்யூட்டர் இன்ஜினியரான சரவணன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாண் இயக்குநராக வேலை செய்து வந்தார். பிறகு அந்த கம்பெனியை மூடிவிட்டதால் புதுவைக்கு வந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியை தொடங்கி நடத்தி வந்தார். ேமலும் கோட்டக்குப்பத்தில் ஒரு ரிசார்ட்டை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பெனியை மூடிவிட்டார். மேலும் தொழில் நஷ்டத்தால் கடன் அதிகமாக உள்ளதாக தனது மனைவி தமிழ்ச்செல்வியிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 5ம் தேதி வேலை சம்பந்தமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தமிழ்ச்செல்வி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கம்ப்யூட்டர் இன்ஜினியர் மாயம் appeared first on Dinakaran.
