சாலை விபத்தில் டிரைவர் படுகாயம்

தேவகோட்டை, ஜூலை 10: ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(50). இவர் தேவகோட்டை தாலுகா சிவந்தான்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தங்கி ரெகவரி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு குறுக்கே வந்துள்ளது. ஆடு மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக பிரேக் பிடித்த போது நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்குப் பின் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post சாலை விபத்தில் டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: