சூதாடிய 2 பேர் கைது

ஊத்தங்கரை, ஜூலை 9: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்எஸ்ஐ கிருஷ்ணன் மற்றும் போலீசார் இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோயில் பின்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த சாகின்ஷா(33) மற்றும் பூபாலன்(42) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சூதாடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: