கல்லூரி மாணவி கடத்தல்

கிருஷ்ணகிரி, ஜூலை 9: பர்கூர் அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று விட்டதாக வாலிபர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு வீட்டில் தூங்கிய மாணவி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கந்திகுப்பம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதில், சூளகிரி நஞ்சாத்தொட்டியைச் சேர்ந்த பிரவீன்குமார்(21) என்பவர், தங்களது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: