போரூர்: கோயம்பேட்டில் ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் தினேஷ்(27). சினிமாவில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். மகள் தீபிகா(23) அம்பத்தூர் பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் கீழ்தளத்தில் இருந்த தீபிகா வெளியே வராததால், ராஜேஸ்வரி அவரை எழுப்ப சென்றார். வீட்டின் கதவு திறக்காத நிலையில், ஜன்னல் வழியே பார்த்தபோது, தீபிகா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீபிகாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.