துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை விரைவில் மாற்ற கோரிக்கை

 

துவரங்குறிச்சி, ஜூலை 8: துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மருதம் பட்டியலில் இருந்து தெத்தூர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து கம்பிகள் மட்டுமே கம்பத்தை தாங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் சற்று அச்சத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் அதிக விவசாய நிலங்கள் உள்ளதால் இந்த மின்கம்பத்தை கடக்கும் போது பொதுமக்கள் சற்று அச்சமடைகின்றனர். உடனடியாக சேதம் அடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை விரைவில் மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: