கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்(55). இவர் களம்பூர் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு பணி முடிந்து இரவில் பைக்கில் வீடு திரும்பினார். அப்போது போளூர் அடுத்த பாக்மார்பேட்டை அருகே திடீரென நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குபேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
The post பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்ஐ பலி appeared first on Dinakaran.