வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். திருவாரூரை சேர்ந்தவர் அருள்பிரகாஷ்(28). விவசாயி. இவரது மனைவி பெரியநாயகி(25). இவர்களது மகள் நிட்சயா(7). நாகை மாவட்டம் ஆய்முரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவி, மகளுடன் அருள்பிரகாஷ் நேற்று மாலை டூவீலரில் சென்றார். வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே சென்றபோது மன்னார்குடியில் இருந்து நாகை நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதிவிட்டு சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்பிரகாஷ் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பெரியநாயகி, நிட்சயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருள்பிரகாஷை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
The post டூவீலர் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.
