அப்போது, அஜித்குமார் என்பவர் அறநிலையத்துறை சீருடை அணிந்து வந்து என்னிடம், உங்கள் காரை நான் நிறுத்தி வருகிறேன் என சொல்லி சாவி கேட்டார். இதையடுத்து, அவரிடம் எனது கார் சாவியை கொடுத்துவிட்டு சாமி தரிசனம் முடித்து வந்து எனது காரில் இருந்த பேக்கை பார்த்தபோது அதில் இருந்த கருமாரி கல் முகப்பு தாலிச்செயின் 6 பவுன், இரண்டு வளையல் 2.5 பவுன், இரண்டு கல் மோதிரம் ஒரு பவுன் என மொத்தம் 9.5 பவுன் நகையை காணவில்லை. எனவே, எனது புகார் மனுவினை ஏற்று எனது நகை 9.5 பவுனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
The post நகை திருட்டு குறித்து நிகிதா புகார்: வழக்குப்பதிவு விபரம் வெளியானது appeared first on Dinakaran.
