பழநி, ஜூலை 5: பழநி அருகே உள்ள தேவத்தூரைச் சேர்ந்தவர் கண்ணையன் (60). இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் பழநி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருநகர் அருகே, பின்னால் வந்த மற்றொரு டூவீலர், கண்ணையனின் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கண்ணையன், பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
