திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பாலக்கரை போலீசார் முதலியார் சத்திரம் பகுதியில் கடந்த 1ம் தேதி வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற முதலியார் சத்திரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.
