இவருக்கு ரூ.1 லட்சத்திற்கான ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசை போட்டியின் நடுவர்களான, திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் வழங்கினர். இரண்டாம் இடத்தை பெற்ற ஆனந்த். எம்.ஜே. இயக்கிய ‘வெளிக்கி’ குறும்படமும், 3ம் இடத்தை அமர் கீர்த்தி இயக்கிய ‘முரல்’ குறும்படமும் பெற்றது. நடுவர்கள் திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, கவிஞர் யுகபாரதி மற்றும் திரைப்பட இயக்குனர் ஷான் ஆகியோருடன் இணைந்த சிறு கலந்துரையாடல் நடந்தது. இதில் திரையிடப்பட்ட குறும்படங்களின் தலைப்புகள் குறித்தும் படங்களின் கதைகள் குறித்தும் பங்கேற்பாளர்களின் கேள்வி பதில்கள் உள்ளிட்ட கலந்துரையாடல்களுடன் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு: கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட நடுவர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.
