பெரம்பலூர் /அரியலூர் ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போக்கை கைவிட வலியுறுத்தல்

 

 

ஜெயங்கொண்டம், ஜூன் 30: ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் சாலை விரிவாக்கம் எனக்கூறி ஏழை, எளிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் போக்கை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, சங்கத்தின் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதோடு, ஜூலை 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதில், மருதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் /அரியலூர் ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போக்கை கைவிட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: