இதனிடையே ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்காவிற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடாவின் நடுவில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கடந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்கின்றன. இந்த ஹார்மூஸ் நீரிணையை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் உலகின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக இந்தியாவின் 40% கச்சா எண்ணெய்யும், 50% எரிவாயு இறக்குமதியும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
The post 5 மாதங்களில் இல்லாத அளவில் விலை உயர்வு : ரஷ்யா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா !! appeared first on Dinakaran.