உலக டென்னிஸ் தரவரிசை நம்பர் 1 சின்னர் சபலென்கா

லண்டன்: உலக அளவில் வீரர்களுக்கான ஏடிபி தரவரிசைப்பட்டியலும், வீராங்கனைகளுக்கான டபிள்யூடிஏ பட்டியலும் நேற்று வெளியானது. ஏடிபி பட்டியலில் ஜானிக் சின்னர் (இத்தாலி), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வரவ் (ஜெர்மனி) ஆகியோர் தொடர்ந்து முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். அடுத்த சில இடங்களிலும் லேசான மாற்றம் உள்ளது. இருப்பினும் ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கார்ட் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டியில் இளம் வீரர் பென் ஷெல்டன் 2 நாட்களுக்கு முன்பு அரையிறுதி வரை முன்னேறி இருந்தார். எனவே 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளார்.

நெதர்லாந்தில் நடந்த லிபெமா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்ரியல் டியாலோ (கனடா) 11 இடங்கள் உயர்ந்து 44வது இடத்தை பிடத்துள்ளார். டபிள்யூடிஏ தரவரிசையில் ஜெர்மனி வீராங்கனை டாட்ஜனா மரியா 43 இடங்கள் முன்னேறி 43வது இடத்தை பிடித்துள்ளார். காரணம் இங்கிலாந்தில் நடந்த குவீன்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதுதான். ஏடிபி போன்ற டபிள்யூடிஏ தர வரிசைப்பட்டியலில் முதல் 3 இடங்களில் அரீனா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காஃப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் தொடர்கின்றனர். இந்த வார தரவரிசையில் சாதனை படைத்துள்ள டாட்ஜனாவுக்கு அவரது கணவர் சார்லஸ் மரியா, ஷெல்டனுக்கு அவரது தந்தை பிரய்ன் ஷெல்டன் என குடும்பத்தினரே பயிற்சியாளராக உள்ளனர். இதில் டாட்ஜனா 2 குழந்தைகளின் தாய்.

The post உலக டென்னிஸ் தரவரிசை நம்பர் 1 சின்னர் சபலென்கா appeared first on Dinakaran.

Related Stories: