மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க ஜூலை 15ல் புதிய திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர்: ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூரில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் மாலையில் கல்லணைக்கு சென்று டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து விட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.20 மணியளவில் தஞ்சை சுற்றுலா மாளிகையிலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தம்பி மகள் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். ன்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.558 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைத்து, 26 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ரூ.1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு 100 மினி பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 021-இல் நான் முதலமைச்சரான பிறகு, டிசம்பர் மாதம் தஞ்சை பகுதிக்கு நான் வந்தபோது சரஸ்வதி மகாலை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதன்பிறகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 75 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க ஆரம்பித்தோம். இந்த நிலையில்தான் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம், சரஸ்வதி மகாலுக்கான தேவைகள் என்ன இருக்கிறது என்று பார்க்க சொல்லி சொல்லியிருந்தேன் அவரும் பார்த்துவிட்டு, சில பரிந்துரைகளை என்னிடத்திலே கொடுத்தார். நேற்று, மாவட்ட ஆட்சியரிடமும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டேன்.

அவரும் சில கருத்துகளை எடுத்து சொன்னார் அதன் அடிப்படையில் ஒரு அறிவிப்பு வெளியிட விரும்புறேன். இனிவரும் காலங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் சேர்த்து, ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் நூலகக் கட்டட பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இந்த நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய ஓலைச் சுவடிகளை பாதுகாக்கத் தேவையான பணியாளர்களை வெளிமுகமை வாயிலாக நியமிக்கவும், அந்த ஓலைச்சுவடிகள் குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த நூலகத்துடன் பழுதடைந்த கட்டடங்களை பழமை மாறாமல் பாதுகாக்கும் வகையில், பொதுப்பணித் துறையின் மரபுசார் கட்டடப் பிரிவின் வாயிலாக 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். க்களின் வரவேற்பை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புலம்பிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய உட்கட்சி பிரச்னையையும், கூட்டணி பிரச்னையையும் மறைப்பதற்காக இன்றைக்கு அறிக்கை அரசியல் செய்துகொண்டு இருக்கிறார். அந்த அறிக்கைகளையாவது ஒழுங்காக செய்திகளை படித்து உண்மை நிலவரங்களை தெரிந்து வெளியிடுகிறாரா, என்றால், அதுவும் இல்லை. ட்சிக்கு வருவதற்கு முன்னால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று. நான் உங்களையெல்லாம் சந்தித்தபோது பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார், அரசு சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கிறோம். அது உடனே தொலைக்காட்சி செய்திகளில் வருகிறது. சமூக வலைதளங்களில் வருகிறது… மறுநாள் எல்லா செய்தித்தாள்களிலும் வருகிறது. அப்போதும் செய்திகளை பார்க்க மாட்டேன் படிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து, இப்படி அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார் நம்முடைய எடப்பாடி பழனிசாமி.கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பில் பெறப்பட்ட 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்களுக்கு தீர்வு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி நூறு நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

நூறாவது நாளில் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், 32 ஆயிரம் பேருக்கு பட்டா – 30 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம், 10 ஆயிரம் பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்கியதோடு, அந்த மனுக்களை மையமாக வைத்து 544 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட்டோம். இதனால், மக்கள் நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்க தொடங்கினார்கள். அந்த மனுக்களை முழுமையாக, முறையாக பரிசீலிக்க முதல்வரின் முகவரி தனித்துறையை உருவாக்கி, எல்லா மனுக்களுக்கும் முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டேன். அடுத்து, மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் அவர்கள் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தினோம். 2024ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சரின் உதவி மையம் தொடங்கினோம். இதில் இருநூறு பேர் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு மனு மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை அவர்கள் கண்காணிக்கிறார்கள். இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லை… இதில், அந்த பெட்டிகளின் சாவி தொலைந்து விட்டதா? என்று கேட்கிறார் சரி, அவர் நினைப்பு எல்லாம் ‘‘பெட்டியில்’’ தான் இருக்கிறது… செய்தித்தாளையே படிக்காத எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன். கடந்த 13ம் தேதி பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்…

அதன் தலைப்பு என்ன தெரியுமா? ‘முதல்வரிடம் மனு அளித்த 30 நிமிடத்தில் ஆக்‌ஷன்’ இதுதான் அந்த தலைப்பு அந்தச் செய்தியை சுருக்கமாக சொல்கிறேன்… கடந்த 11ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க நான் சேலம் சென்றிருந்தபோது யாழ்மொழி என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியும், அநிருத்தன் என்ற ஆறாம் வகுப்பு மாணவனும் என்னை சந்தித்து, தாங்கள் படித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை கேட்டு மனு கொடுத்தார்கள். தற்கு பிறகு நடந்ததை பற்றி அந்த பத்திரிக்கையில் என்ன எழுதியிருந்தார்கள் என்றால், இரவு 8 மணிக்கு அந்த மாணவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்திய முதல்வர். அவர்களிடம் இருந்து மனுவை பெற்று கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அவர்களது கன்னத்தை தட்டி வாழ்த்து தெரிவித்து சென்றார். இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சேலம் பொதுப்பணித் துறை, பி.டி.ஓ.அலுவலகம் ஆகியவற்றில் இருந்து தலைமை ஆசிரியரிடம் பல்வேறு விபரங்கள், ஆவணங்களை பெற்றனர்.

மறுநாள் காலை 7 மணிக்கு நங்கவள்ளி ஒன்றிய பொறியாளர் வள்ளி தலைமையிலான குழுவினர், அந்த பள்ளியில் ஆய்வு செய்து சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டுவதற்கான மதிப்பீடு தயாரித்தனர். ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக சுற்றுச்சுவர். கழிப்பறைக் கட்டடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடம் மனு கொடுத்த சிறிது நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதல்வரிடம் மனு கொடுத்த மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் பாராட்டினர் என்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.
மக்களான உங்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும், இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும். அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும். தன்னார்வலர்கள் உங்கள் வீடு தேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். இப்படி, நாளும் பொழுதும் அல்லும் பகலும் மக்களின் குறைகளை தீர்க்கும் நம்மைப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரியதானே செய்யும் இப்படி, இவர் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர். இதுவரை அவர் செய்ததெல்லாம் உங்களுக்கே தெரியும். ஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு செய்தேன். கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், ஆளுநர் இப்போதுவரை ஒப்புதல் தரவில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பார் என்று நினைத்தோம். ஆனால், இன்னும் மாறவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கும் ஒரே கேள்வி என்றவென்றால், ஒரு ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால் ஒன்றிய அரசு மற்றொருபக்கம் நிதி ஒதுக்காமல் உபத்திரவம் செய்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து, நாம் எவ்வளவோ திட்டங்களையும் சாதனைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம். ன்னுடைய 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத தடையோ. எதிர்கொள்ளாத நெருக்கடியோ இல்லை! மிசாவையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். அரசியலில் எல்லா நெருக்கடிகளையும் எல்லா எதிரிகளையும் அவர்களின் சதி திட்டங்களையும் அவர்களோடு எதிர்த்துப் போராடியவன். அதையெல்லாம் முறியடித்துதான் இன்றைக்கு உங்களின் அன்போடு, உங்களுடைய ஆதரவோடு நான் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறேன். எல்லா வகையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் இங்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன். திர்க்கட்சிகளின் அவதூறாக இருந்தாலும், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையாக இருந்தாலும், ஆளுநரின்

அடாவடியாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி நினைத்ததை செய்து முடிக்கும் துணிவும் கொள்கை உறுதியும் மக்களான உங்கள் ஆதரவும் எனக்கு இருக்கிறது அந்த ஆதரவை எப்போதும் நீங்கள் தர வேண்டும் தர வேண்டும்.
இன்றைக்கு கும்பகோணத்தில் நம்முடைய கலைஞர் அவர்களின் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்திற்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துச்சொல்லி, எப்போதும் நீங்கள் தொடர்ந்து நல்லாதரவை தர வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியை முடித்து விட்டு சாலை மார்க்கமாக திருச்சி வந்தார். தொடர்ந்து, நேற்று மதியம் 3.15 மணியளவில் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

 

The post மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க ஜூலை 15ல் புதிய திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: