இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து மறைவு வேதனையளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை முத்து மறைவு வேதனையளிக்கிறது, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழந்து மறைந்துள்ளார் நெல்லை முத்து என முதல்வர் கூறியுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய முத்து, அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

The post இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து மறைவு வேதனையளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: