இந்தியன் ஆயில் யுடிடி பேட்மின்டன் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் இறுதி சுற்றுக்கு தகுதி

அகமதாபாத்: இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 பேட்மின்டன் போட்டியில், டெல்லி தபாங் அணியை வீழ்த்தி, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடந்து வருகின்றன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், டெல்லி தபாங், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் இடையே முதல் அரை இறுதிப் போட்டி நடந்தது.

இதில், முதலில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில், டெல்லி அணியின் கியுக் இசாக்கை, ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா, 7-11, 11-10, 11-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 2வதாக நடந்த மகளிர் ஒற்றையர் போட்டியில், ஜெய்ப்பூர் அணியின் பிட் ஈர்லாண்டை, டெல்லி அணியின் மரியா சியாவோ, 6-11, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்தியன் ஞானசேகரன் இணை வென்றது.

4வதாக நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரனை, ஜெய்ப்பூர் அணியின் யஷான்ஷ் மாலிக், 11-10, 11-9, 6-11 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதனால், இரு அணிகளும், 6-6 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் இருந்தால், வெற்றியை தீர்மானிக்க கடைசியாக நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பரபரப்பாக காணப்பட்டது. அதில், டெல்லி அணியின் தியா சித்தலேவை, ஜெய்ப்பூர் அணியின் ஸ்ரீஜா அகுலா, 11-9, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதனால், 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

The post இந்தியன் ஆயில் யுடிடி பேட்மின்டன் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் இறுதி சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: