திண்டுக்கல், ஜூன் 14: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையில் திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயிலில் வந்து இறங்கி பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், ஒடிசாவை சேர்ந்த திவாகர்கத்தார்யா(33) என்பது தெரிய வந்தது. மேலும் அவரை விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சோதனை மேற்கொண்ட போது 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் திவாகர்கத்தார்யாவை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.