அரசு அலுவலர்களுக்கு வரும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்: தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி 3 நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன் மனு பெற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டும்.

அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக்களை கையாளும்போது அரசாணைகள், அரசு கடிதங்களில் வகுத்தளிக்கப்பட்ட அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும் நடைமுறைகளும், அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து அரசு அலுவலகங்களும் அலுவலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களை பதிவு செய்திட ‘குறைகளைவு மனுப்பதிவேடு’ பராமரித்தல் வேண்டும்.

அந்த பதிவேட்டில் அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்திடல் வேண்டும். அப்பதிவேட்டை மாத இறுதியில் அஅந்த அலுவலக தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்ய ஆவன செய்ய வேண்டும். மேலும் குறைகளைவு மனு பதிவேடு அத்துறையின் துறை ரீதியிலான வார, இருவார, மாதாந்திர ஆய்வு மற்றும் மனித வள மேலாண்மை வருடாந்திர ஆய்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post அரசு அலுவலர்களுக்கு வரும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்: தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: