சென்னை : சென்னை மாநகராட்சி ஆணையர் போல் போலியாக கையெழுத்திட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பா.ஜ.க முன்னாள் நிர்வாகி ஜெயச்சந்திரன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 22 நபர்களிடம் ரூ.1.5 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைமாக உள்ள லதா, கெளரி, வெங்கடேஷ் ஆகிய மேலும் மூவரை பெரியமேடு போலீசார் தேடி வருகின்றனர்.
The post சென்னை மாநகராட்சியில் வேலை என ரூ.1.5 கோடி மோசடி appeared first on Dinakaran.