உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வந்த போதும், மறு சீரமைப்பு யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் மறுசீரமைப்பாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்துள்ளார். அவர் ஏற்கனவே இது பற்றி பலமுறை கூறியுள்ளார். ஆனால், இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செய்யப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமும், சவுராஷ்ட்ரா தமிழ் சங்கமும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுளான முருகன் மாநாட்டினை தமிழ்நாட்டில் நடத்துவது தான் சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பை திசை திருப்ப முயற்சி: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.