இந்நிலையில், நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாகையில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்கா, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப சேவைகள் துறையில் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம், நாகை மாவட்டத்தின் இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, தமிழ்நாட்டில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும். இதன்மூலம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழிலுக்கு பெயர் பெற்ற நாகப்பட்டினம், தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
The post நாகையில் மினி டைடல் பூங்கா.. 600 பேருக்கு வேலைவாய்ப்பு: டெண்டர் கோரியுள்ள தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.