இப்போட்டியில் இருவரும் சளைக்காமல் போட்டி போட்டு ஆடினர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ரைபாகினா, 2வது செட்டில் கோட்டை விட்டார். தொடர்ந்து நடந்த 3வது செட்டும் இகா வசம் சென்றது. அதனால், 1-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற இகா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் உக்ரைனை சேர்ந்த உலகின் 13ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி உடன் மோதினார்.
இப்போட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக ஆடியதால், முதல் இரு செட்களில் ஆளுக்கு ஒன்றை கைப்பற்றினர். 3வது செட், ஸ்விடோலினா வசம் வந்தது. அதனால், 4-6, 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் வென்ற ஸ்விடோலினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இகா; போராடி வீழ்ந்த ரைபாகினா appeared first on Dinakaran.