துறையூர், மே28: துறையூர் அருகே கார் டூவீலரில் மோதிய விபத்தில் முதியவர் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள கோட்டப்பாளையம் வானப்பட்டரை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் (60). அதேப் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(62). இருவரும் டூவீலரில் புடலாத்தியிலிருந்து கோட்டப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் மாராடி-எரகுடி இடையே சென்ற போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உப்பிலியபுரம் போலீசார் இருவரது சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுனர் பொ ன்னம்பலம் மகன் கோபியிடம் விசாரிக்கின்றனர்
The post துறையூர் அருகே கார் மோதி 2 முதியவர் பலி appeared first on Dinakaran.