கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

The post கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: