மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசுப்பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவர் கைது செய்யப்பட்டார். இருவரும் ஓராண்டாக பழகி வந்த நிலையில் மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கர்ப்பம் தெரியவந்தது. புகாரின்பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய 16 வயது மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.