சென்னை: நடப்பாண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 27ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி 1 லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்ப பதிவும், அவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 93 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். வருகிற 27ம் தேதியுடன் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைகிறது.
The post கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாளே அவகாசம் appeared first on Dinakaran.