எனவே மீதமுள்ள தகுதியான குடும்ப அட்டைகளுக்கு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் ஜூன் முதல் வாரம் முதல் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில், வரும் 29ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
பெண்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனே ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த முறை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் உரிமைத் தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.