கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இறுதி தேர்வு முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. வெயில் ஒருபுறம் இருந்தாலும், ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கோடை விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் திரும்பிவர வேண்டும் என்பதால் முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும், வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு: தொடக்க கல்வி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: