புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘‘ எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நம்பகத்தன்மையுடனும், மாற்ற முடியாத வகையிலும் அளிக்கும் ஆதரவை கைவிடும் வரை பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். ஏனெனில் தண்ணீரும், ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது. இருதரப்பு பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்லாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியலை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்க நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். அதே போல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானை துருக்கி வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே போல் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்திறன் ஆகியவை இந்தியா-சீனா உறவுகளின் அடிப்படையாக உள்ளன என்பதை சீனத் தரப்பு நன்கு அறிந்திருக்கிறது’ என்றார்.
The post தீவிரவாதத்தை நிறுத்தும்படி பாக்.கிற்கு வலியுறுத்துங்கள்: துருக்கிக்கு இந்தியா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.