திருச்சி, மே 22:பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை கோட்டத்தில் உள்ள பூங்குடி மற்றும் திருச்சி பாதையில் பொறியியல் பணி நடந்து வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. வண்டி எண். 12666 கன்னியாக்குமரி – ஹவுராஹ் அதிவிரைவு ரயில், மே 24ம் தேதி காலை 5.50 மணிக்க கன்னியாக்குமரியில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது, மானாமதுரை மற்றும் காரைக்குடி ரயில்நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
வண்டி எண். 07229 கன்னியாக்குமரி – சாரப்பள்ளி கோடை விரைவு ரயில் மே 23ம் தேதி காலை 5.15 மணிக்கு கன்னியாக்குமரியில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக செல்லும், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிற்காது. கூடுதல் ரயில் நிறுத்தங்கள் மானாமதுரை மற்றம் காரைக்குடி ரயில் நிலையங்களில் வழங்கப்படும். சேலம் போதனூர் பகுதியில் நடந்து வரும் பொறியியல் பணி காரணமாக ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்ட விவரம்: வண்டி எண். 16844 பாலக்காடு டவுன் – திருச்சி விரை ரயில் மே 22ம் தேதி பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு குளித்தலை வரை மட்டும் செல்லும். வண்டி எண் 16843 திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 22ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பெட்டவாய்த்தலை வரை மட்டும் செல்லும்.
வண்டி எண். 16844 பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில் மே 29ம் தேதி பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பேதனூர், இருங்களூர் வழியாக செல்லும், கோவை மற்றும் கோவை வடக்கு மற்றும் பீலமேடு வழிழயாக செல்லாது. வண்டி எண். 16159 தாம்பரம் – மங்களூர் விரைவு ரயில், மே 24 மற்றம் 26ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு இருங்களூர், போதனூர் வழியாக செல்லும், கோவை வழியாக செல்லாது, போதனூரில் கூடுதல் ரயில் நிறத்தங்கள் வழங்கப்படும். பேராலம் மற்றும் காரைக்கால் இடையே ப்ராட் காஜ் மின் வழி ஆய்வு நடக்க இருப்பதால் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது அதன் விவரம் வருமாறு: வண்டி எண் 66067 மயிலாதுறை – திருவாரூர் மெமு ரயில் மயிலாடுதுறையில் இருந்து மே 23ம் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட இருந்து ரயில் ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 66024 திருவாரூர் – மயிலாடுதுறை மெமு ரயில் மே 23ம் தேதி திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது. பகுதிவாரியாக ரத்து: வண்டி எண்.56002 மன்னார்குடி – மயிலாடுதுறை பணிகள் ரயில் மன்னார்குடியில் இருந்து மே 23ம் தேதி காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டும் செல்லும். வண்டி எண் 56001 மயிலாடுதுறை – மன்னார்குடி பயணிகள் ரயில் மே 23ம் தேதி மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட இருந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. ரயில் திருவாரூரில் இருந்து மாலை 6.08 மணிக்கு புறப்படும். வண்டி எண் 07696 ராமேஸ்வரம் – செக்கண்டராபாத் சிறப்பு ரயில் மே 23ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு வழிதடத்தில் சுமார் 2 மணிநேரம் வரை ஒழுங்கமைக்க எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்: தென்னக ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.