புழல்: விளம்பர பலகைகள் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சியில் ஆன்லைனில் அனுமதி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் விளம்பர பலகைகள் நிறுவுவதற்கு மாநகராட்சியின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதில் தேவையான ஆவணங்களை நேரடியாக அலுவலகம் வந்து சமர்ப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இந்த முறையை மாற்றி வெளிப்படைத்தன்மையாகவும், திறனோடும், எளிதாகவும் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக நிகழ்நிலையில் (ஆன்லைன் சிஸ்டம்) அனுமதி வழங்கும் நடவடிக்கை நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களோடு சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த முறையில் எளிமையாகவும், காலதாமதமின்றியும் ஒப்புதல் வழங்குவதற்கும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
The post விளம்பர பலகைகளுக்கு ஆன்லைனில் அனுமதி appeared first on Dinakaran.